Sunday, August 17, 2014

ஆங்கிலம்

தங்கள் பிள்ளை வெளி உலகில் செல்லும் போது ஆங்கிலப் புலமையினால் திண்டாடக்கூடாது என்று நினைக்கும் ஆங்கிலப் புலமையுள்ளப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். சிலர் நாம் தான் அவ்வளவாக ஆங்கிலப் புலமைப் பெறவில்லை நம் குழந்தையாவது ஆங்கிலத்தில் புலமையோடு இருக்க வேண்டுமே என்பதற்காக ஆங்கித்தில் பேச முயற்சிக்கிறார்கள். இது எல்லாம் சரி தான். ஆனால் வெறும் டாடியையும், மம்மியையும் மட்டும் ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுப்பவர்களை ஏற்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலத்தில் புலமை இருப்பவர்கள் கூட தன் குழந்தை அம்மா, அப்பா என்று அழைப்பதையே பெரிதும் விருமபுகிறார்கள். டாடீஸ், மம்மீஸ் கதை தான் வேறு!

No comments:

Post a Comment